சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.


Coimbatore: சனாதன தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருவதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆணையாளரிடமும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.



இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் (இளைஞர் அணி) கே. சூர்யா அளித்த மனுவில், கடந்த 2023ஆம் ஆண்டு சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் மீது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில், மே 2026இல் தமிழக சட்டமன்றத்தில் “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்” என அவர் மீண்டும் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படும் மதுரை தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் காங்கிரஸ் நிர்வாகி ஆசான் மௌலானா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதோடு, சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தி பொது அமைதியை பாதிக்கும் சூழலை உருவாக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் ஆசான் மௌலானா ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்து, மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...