திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்க்கட்சியாக செயல்படும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.


சென்னை:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு திமுக தலைவர் M. K. Stalin தலைமை தாங்குகிறார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் மே 14 அன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தோல்வியடைந்தது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளும் கட்சியாக இருந்த திமுக 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.

இதையடுத்து, இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சியாக சட்டப்பேரவையிலும் மக்களிடையிலும் செயல்பட வேண்டிய அணுகுமுறைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...