பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பயந்த மக்கள் மரங்களில் ஏறி தப்பிய நிலையில், இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.


கோவை: கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு காங்கேயம் காளை ஒன்று சாலைகளில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.

அந்த பகுதியில் இருந்த சில வாலிபர்கள், காளையை பார்த்து மரத்தின் மீது ஏறி அதன்மீது கல் மற்றும் சில பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காளை அவர்களை விரட்டத் தொடங்கியுள்ளது.

பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கிய இரண்டு வாலிபர்களை காளை முட்டி தூக்கி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காளை சாலைகளில் வேகமாக அங்கும் இங்கும் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வாளாங்குளம் குளக்கரையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் காளை பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, காளையின் உரிமையாளர் யார், கயிறு அவிழ்த்து தானாக வந்ததா அல்லது யாராவது காளையை அங்கு விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் காங்கேயம் காளை திடீரென ஆக்ரோஷமாக நடந்து பொதுமக்களை விரட்டிய சம்பவம் காரணமாக உக்கடம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...