கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.


கோவை : மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு மக்கள் நலன் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள்மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4,765 டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளை அடையாளம் காண அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், வழிபாட்டு தலங்கள் அருகே 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகே 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 255 கடைகள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் 717 கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கோவை வடக்கு பகுதியில் 156 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 128 கடைகளும் உள்ளன.

இதில் கோவை வடக்கு பகுதியில் 48 கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 21 கடைகளும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வருவதால், மொத்தம் 69 கடைகள் அடுத்த 15 நாட்களுக்குள் மூடப்பட உள்ளன.

மேலும், 1557, 1603, 1846 மற்றும் 1662 ஆகிய எண்களைக் கொண்ட 4 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1662 என்ற எண்ணுடைய கடை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான முந்தைய ஆட்சிக்காலத்திலும், 2023ஆம் ஆண்டு. வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...