புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டிருந்த அரசியல் இழுபறி, கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு தெளிவடைந்ததன் மூலம் படிப்படியாக சரியாகி வரும் நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே இருந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்டு, மாநில நலனுக்கான நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க புதிய அரசு விரைவாக அமைக்கப்படுவது ஜனநாயகத்தின் அடிப்படை கடமை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அரசு அமைப்பதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளை ஆளுநர் உடனடியாக தொடங்க வேண்டும் என்று திமுக சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...