உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள முரீது பாபா தர்காவில் 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.



உரூஸ் கந்தூரி விழா என்பது இஸ்லாமிய சூபி ஞானிகளின் நினைவு நாளில் தர்காக்களில் கொண்டாடப்படும் புனித விழா ஆகும்



இந்த விழா கடந்த மாதம் 19ஆம் தேதி தாஹிர் ஷா வலியல்லாஹ் தர்கா வளாகத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக மவ்லீது ஒதப்பட்டு, இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆன்மீக உரைகள் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து கந்தூரி எனப்படும் அன்னதானம் நடைபெற்றது. மேலும் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ‘சந்தன உருஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக சந்தனக்குடம் முரீது பாபா தர்காவிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு சந்தனம் மற்றும் தப்ரூத் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சைய்யத் சுல்தான் ஷா காதிரி (சஜ்ஜாதா நஷீன்), எம். மூசா, காதிரி, கா. அப்பாஸ், அசன் பாஷா, அபூபக்கர் உள்ளிட்ட உலமாக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...