காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்றனர். ரூ.2.5 லட்சம் மதிப்பிலான இத்திருட்டு சம்பவம் காங்கேயம் பகுதி விவசாயிகள் மத்தியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி பகுதியில் விவசாயி பொன்னுசாமியின் (65) தோட்டத்தில் இருந்து மர்ம நபர்கள் 19 ஆடுகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயம் செய்து வருவதோடு ஆடு மாடுகளையும் வளர்த்து வரும் பொன்னுசாமி, வழக்கம் போல் நேற்று மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மாலை நேரத்தில் தோட்டத்தில் உள்ள முக்கால் பட்டியில் அடைத்துவிட்டு இரவு தங்குவதற்காக வீட்டுக்கு சென்றார்.




நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகள், 1 கிடாரி மற்றும் 7 குட்டிகள் ஆகிய மொத்தம் 19 ஆடுகளை திருடிச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் ஆகும் என்று விவசாயி பொன்னுசாமி தெரிவித்தார். காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்றபோது ஆட்டுப்பட்டி காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி உடனடியாக காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வழித்தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கேயம் பகுதியில் சமீபத்தில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் இறந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடிய சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தண்ணீர் இல்லாமல் விவசாயமே பொய்த்துப்போன நிலையில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து அதில் வருமானம் ஈட்டிவரும் விவசாயிகள் மத்தியில் இந்த திருட்டு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட ஆடுகளை மீட்டு குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...