கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வகையில், கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், கலைஞர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதற்கு முன்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் கட்சியினர் இணைந்து இருசக்கர வாகன பேரணியும் நடத்தினர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “கழக ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதை உங்கள் வரவேற்பின் மூலம் உணர முடிகிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.



உங்கள் ஆதரவுடன் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அங்கே உங்கள் குரலாக ஒலிப்பேன். தொகுதியின் தேவைகளை வலியுறுத்தி நிறைவேற்றப் பாடுபடுவேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுவேன்.

இல்லத்தரசி திட்டம், மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சொன்னதைச் செய்வது திமுக அரசின் பண்பாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொடர உறுதிசெய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், செட்டிபாளையம் பகுதிகளில் பிரச்சார ஏற்பாடுகளை செய்த கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், உடன்பிறப்புகள் மற்றும் வாகன பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...