கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன்.




இந்நிலையில், இக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் இணைந்து எஸ்பி வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர். மேடை அமைப்பு, ஒலிபெருக்கி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மக்கள் அமரும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் நேரடியாகக் கண்காணித்தனர்.




கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த இப்பொதுக்கூட்டத்தில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.




கொடீசியா மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வருகைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை நடைபெறும் இப்பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...