தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி தீவிர எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாளை (April 16) தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.


Chennai: தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகள், கடைகள் அனைத்திலும் கருப்புக் கொடி பறக்கட்டும். வாசல்களில் எதிர்ப்புணர்வு கோலங்களாக பதியட்டும். இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம், தமிழர் உரிமைக்கான போராட்டம்.

எனவே, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இன்று நாம் குரல் எழுப்பவில்லை என்றால், நாளை நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பிழக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்திற்குத் தேவையான கருப்புக் கொடிகள் வீடு தோறும் வழங்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்”, குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...