மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC, VMC இயந்திர Hour Rate கட்டணங்களை 15-30 சதவீதம் உயர்த்த TAGCT, CODMA தொழில் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றின. உற்பத்தி நிறுவனங்கள் கட்டணத்தை ₹300-ல் இருந்து ₹130 வரை குறைத்ததால் தொழில் முனைவோர் பாதிப்பு.


Coimbatore: மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து 'டாக்ட்' தொழில் அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, கோவையில் 'ஜாப் ஒர்க்'செய்யும் தொழில் முனைவோர் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான குறுந்தொழில் முனைவோர் 'சிஎன்சி', 'விஎம்சி' இயந்திரங்களை வங்கிகளில் கடன் மூலம் பெற்று தொழில் செய்து வருகின்றனர். அனைவருக்கும் 'ஜாப் ஒர்க்'கிடைக்காத சூழ்நிலையை பயன்படுத்தி உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 'சிஎன்சி' இயந்திரங்களுக்கு Hour Rateகட்டணத்தை 300 ரூபாய்க்கு 130 ரூபாய் வரை கட்டணத்தை குறைத்து கொடுப்பதால் 'ஜாப் ஒர்க்' செய்யும் தொழில் முனைவோர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர் 'ஜாப் ஒர்க்' தொழில் முனைவோருக்கு உரிய முறையில் இயந்திர கட்டணத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். இது தொடர்பாக எங்கள் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



'காட்மா' தொழில் அமைப்பின் தலைவர் சிவக்குமார் கூறும்போது, மூலப் பொருட்களை விலை உயர்வு, வரி அதிகம் செலுத்துதல், குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வாடகை அதிகம் நிர்ணயிக்கப்படுவது,தொழிலார்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளது உள்ளிட்ட காரணங்களால் குறுந்தொழில் முனைவோருக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் 'ஜாப் ஒர்க்' அடிப்படையில் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் லாபம் இல்லாத நிலையில் செயல்பட்டு வரும் அவல நிலை காணப்படுகிறது.

எனவே 'ஜாப் ஒர்க்' தொழில் நிறுவனங்கள் இயந்திரங்களுக்கான 'Hour Rate' 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தினால் மட்டுமே தொழிலில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் அலுவலகத்தில் நடந்தகூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். 

மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...