கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயணித்தனர். 48 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்திலும் சேவைகள் தொடர்ந்தன என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Coimbatore: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் நிலவிய நிலையிலும், கோவை விமான நிலையத்திலிருந்து ஷார்ஜாவுக்கு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்ட விமான சேவைகளில் 4,880 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக கோவையில் இருந்து ஷார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவைகள் மார்ச் 1-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டன. கோவையிலிருந்து அபுதாபிக்கு ரத்து செய்யப்பட்ட சேவைகள் தற்போது வரை மீண்டும் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், மார்ச் 9-ம் தேதி ஒரு நாள் கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 12-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை வாரந்தோறும் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து விமான சேவைகள் வழங்கப்பட்டன.
போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் மார்ச் மாதத்தில் 16 நாட்கள் இயக்கப்பட்ட விமானங்களில் மொத்தம் 4,880 பேர் பயணித்துள்ளனர். 48 டன் எடை கொண்ட சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்படும்போதும் 160 பயணிகள் கோவை வந்து சேர்ந்தனர். அதேபோல் 140 பயணிகள் கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட்டுச் சென்றனர். மேலும், ஒவ்வொரு முறை விமானம் இயக்கப்பட்டபோதும் 3 டன் எடை கொண்ட சரக்குகள் விமானங்களில் கொண்டு செல்லப்பட்டன.
ஏப்ரல் மாதத்திலும் கோவை-ஷார்ஜா இடையே விமான சேவைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், ஈரான்-இஸ்ரேல் போர் சூழல் மோசமடைந்தால் திடீரென சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை சர்வதேச விமான நிலையம் மேற்கு தமிழகம் மற்றும் கேரளாவின் சில பகுதிகளுக்கு முக்கிய வான் போக்குவரத்து மையமாக செயல்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கான விமான இணைப்புகள் இப்பகுதியில் வசிக்கும் வெளிநாடு வேலைக்கு செல்பவர்களுக்கு மிக முக்கியமானதாக உள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...