வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, வேட்புமனு தாக்கல் செய்த இரண்டு நாட்களில் தன் மீது 110 வழக்குகள் சுமத்த முயற்சிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.


Coimbatore: இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் K. Surya, எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்து, அதற்கான வேட்புமனுவை கடந்த புதன்கிழமை (02.04.2026) அன்று பேரூர் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.






இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த இரண்டு நாட்களிலேயே காவல் துறையினர் உள்நோக்கத்துடன் அவர் மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டி, தமிழகத் தேர்தல் ஆணையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அவர் புகார் மனு அனுப்பியுள்ளார்.






வேட்புமனு தாக்கல் செய்த இரண்டே நாட்களில், சில காவல்துறையினரின் தூண்டுதலின் பேரில் சுமார் 110 வழக்கு தன் மீது சுமத்த முயற்சிப்பதாக K. Surya தெரிவித்துள்ளார். மக்கள் செல்வாக்கு இருப்பதை அறிந்து, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தடுக்கும் நோக்கிலும், தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயல் திட்டமிட்டு செய்யப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.






ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில், தன்னை மட்டும் குறிவைத்து இத்தனை வழக்குகளைப் போட முயற்சிப்பது ஒரு மனித உரிமை மீறல் என அவர் சாடியுள்ளார். குறிப்பாக கோவை மாநகர செல்வபுரம் காவல் நிலையக் காவல்துறையினர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.






இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் IAS, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி IAS, சென்னை மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் IAS மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு அவர் அவசரப் புகார் மனுக்களை அனுப்பியுள்ளார்.






தன் மீது சுமத்தப்படும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...