கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்று சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை குறித்து வலியுறுத்தப்பட்டது.


Coimbatore:

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் IQAC மற்றும் ஒளிரும் கோவை தன்னார்வ அமைப்பு இணைந்து “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் 30.03.2026 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், 50 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவையை வெளியிட்டார்.

அவர் உரையாற்றும்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நகர தூய்மை மிக முக்கியமானவை என்றும், கோவையை ஆரோக்கியமான நகரமாக மாற்ற அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாணவர்கள் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், தூய்மை குறித்து சிறுவயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் முனைவர் சிஏ கைலாஷ் குமார் மற்றும் தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த கருத்தரங்கிற்காக மாநிலம் முழுவதும் இருந்து 50 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கட்டுரைகள் வல்லுநர் குழுவின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

அவற்றில் சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் தி சென்னை மொபைல்ஸ் நிறுவனர் ஏ.எம்.சம்சு அலி பரிசுகளை வழங்கினார்.

முதல் பரிசு ரூ.15,000 முனைவர் பி.நரசிம்மன், இரண்டாம் பரிசு ரூ.10,000 மாணவி வி.சண்முகபிரியா, மூன்றாம் பரிசு ரூ.5,000 மாணவிகள் எம்.மோகனா மற்றும் ஆர்.ஸ்ரீ லஷ்மி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வை IQAC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஒளிரும் கோவை அமைப்பினர் ஒருங்கிணைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...