ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் சீமா அறிவித்தது. GST வரியை 5 சதவீதமாக குறைக்க கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: மூலப்பொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா) அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 2025-ல் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக பம்ப்செட் பொருட்கள் விலை 2025 அக்டோபர் மாதம் 10 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், நிலைமை சீரடையாத காரணத்தால் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை பம்ப்செட் விலை உயர்த்தப்படுவதாக சீமா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீமா தலைவர் மிதுன் ராமதாஸ் கூறுகையில், "ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் நிலையற்ற தன்மை காணப்படும் போதும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பிரதமர் Narendra Modi-யின் நடவடிக்கை பாராட்டுக்குரியது" என்றார்.

"தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை தொழில் துறையினர் எதிர்கொள்ள பல்வேறு உதவிகள் மத்திய அரசு செய்து வரும் நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை தொழில் துறையினருக்கு தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஒரு ஆண்டில் காப்பர் மூலப்பொருள் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூபாய் 850-லிருந்து, ரூபாய் 1,200 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் மற்ற மூலப்பொருட்களான ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள 2025 அக்டோபர் மாதம் பம்ப்செட் விலை 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது வரை இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத காரணத்தால் ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

"பம்ப்செட் தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவும், GST வரி விதிப்பு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மிதுன் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...