கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Coimbatore: 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், 10 லட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.










கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.








முதல்வர் M. K. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இளைஞர் அணியின் செயல்பாடுகள் மற்றும் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் செயல்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.








இந்நிகழ்வில், செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே. இ. பிரகாஷ் எம்.பி, மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...