கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Coimbatore: 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், 10 லட்சம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் கோவையில் இன்று நடைபெற்றது.










கழக இளைஞர் அணிச் செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம், கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.








முதல்வர் M. K. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இளைஞர் அணியின் செயல்பாடுகள் மற்றும் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் செயல்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.








இந்நிகழ்வில், செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் கே. இ. பிரகாஷ் எம்.பி, மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...