திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

திருப்பூரில் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரி காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன. மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துவதே நோக்கம்.


திருப்பூர்: திருப்பூர் செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லூரியின் காமர்ஸ் & கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் துறையும் வேர்கள் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளன.



முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 15) இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.



சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் சமூக அர்ப்பணிப்பு செயல்பாடுகளுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர்களின் அனுபவங்களையும், சமூக ஈடுபாட்டையும் மேம்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.



இயற்கை சேவை, சமூக விழிப்புணர்வு முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், பொதுவாழ்வின் பொறுப்பை மாணவர்களுக்கு அறிவு பரிமாற்றம் செய்வது ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் குறிக்கோள்களாகும். மேலும் மாணவர்களுக்கு சமூக சேவை மற்றும் சமூக ஈடுபாட்டில் நேரடி அனுபவத்தை வழங்குவதும், மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதும் இதன் நோக்கங்களாகும்.



இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் மாணவர்கள், வேர்கள் அமைப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....