மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க முயற்சி: பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு

மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 100 ஆண்டுகள் பழமையான பிளேக் மாரியம்மன் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை முயற்சி. திமுக முன்னாள் நிர்வாகியின் தூண்டுதலால் நடப்பதாக கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


கோவை: கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரத்தில் ஒதுக்குப்புறமாக உள்ளது.

கோவிலின் அருகே திமுக முன்னாள் நிர்வாகி ஒருவரின் அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்தக் கட்டிடத்தை கோவில் மறைப்பதாக கூறி அதன் உரிமையாளர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், திமுகவைச் சேர்ந்த காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் அவர்களும் கோவிலை இடிப்பது சம்பந்தமாக கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



இந்த தகவலை அறிந்த பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், அதிமுக நகர்மன்ற உறுப்பினர் வனிதா, திமுக நகர்மன்ற உறுப்பினர் அனிதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு திரண்டனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகையில், "யாருக்கும் தொல்லையின்றி மேம்பாலத்துக்கு அடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலை திமுக முன்னாள் மூத்த நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் நெடுஞ்சாலைத் துறை இடிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். புகார் கடிதம் கொடுத்தவர்களின் கட்டிடமே கொடுக்கப்பட்ட அனுமதியை விட கூடுதலாக ஒரு மடங்கு உயர்த்தி நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளது. அது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கோவிலை இடிக்க முன்வருவதை கண்டிக்கிறோம். கோவிலை தொட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோவில் இடிப்பதை நெடுஞ்சாலைத் துறை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...