கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட் விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் பி.எட் படிப்புக்கான விண்ணப்ப காலக்கெடுவை நவம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. 500 இடங்கள் நிரம்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் பி.எட் படிப்புக்கான விண்ணப்ப காலக்கெடுவை நீட்டித்துள்ளது. நடப்புக் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தன. ஆனால், மொத்தமுள்ள 500 இடங்கள் முழுமையாக நிரம்பவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தின் கீழ் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட எட்டு பாடப்பிரிவுகளில் பி.எட் படிப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அக்டோபர் 13 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நீட்டிப்பு காலத்தை பயன்படுத்தி, பி.எட் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...