கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஆளுநரிடம் மனு அளித்தார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்றபோது மனு அளித்தார். இச்செயல் விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.



பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரகாஷ், "பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் புகார் கொடுத்துள்ளேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளேன்," என்றார்.

பிரகாஷ் தனது புகாரில், ஆதிதிராவிடர் விடுதிகள் பற்றியும், ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பிற்கான அதிக செலவு, விடுதி பராமரிப்பு நிதி முறைகேடு, விளையாட்டு மைதானங்களின் பயன்பாடு தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.

"கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருகின்றனர். இந்த அனைத்து பிரச்சினைகளையும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்," என பிரகாஷ் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...