கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஆளுநரிடம் மனு அளித்தார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில், ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்றபோது மனு அளித்தார். இச்செயல் விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.



பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரகாஷ், "பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால்தான் புகார் கொடுத்துள்ளேன்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளேன்," என்றார்.

பிரகாஷ் தனது புகாரில், ஆதிதிராவிடர் விடுதிகள் பற்றியும், ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பிற்கான அதிக செலவு, விடுதி பராமரிப்பு நிதி முறைகேடு, விளையாட்டு மைதானங்களின் பயன்பாடு தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.

"கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருகின்றனர். இந்த அனைத்து பிரச்சினைகளையும் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்," என பிரகாஷ் தெரிவித்தார்.

Newsletter

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...