கோவை ஆனைகட்டி சாலையில் செங்கல் சூளை புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோவையில் கன மழை காரணமாக சின்னத்தடாகம் அருகே செங்கல் சூளையின் 100 அடி உயர புகைப்போக்கி சரிந்து விழுந்ததால் ஆனைகட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், சின்னத்தடாகம் தண்ணீர் பந்தல் அருகே உள்ள செங்கல் சூளையில் இருந்த புகைப்போக்கி உடைந்து கோவை ஆனைகட்டி சாலையில் விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை ஆனைகட்டி சாலை, தடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த பல்வேறு செங்கல் சூளைகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.



இந்நிலையில், தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் இருந்த சுமார் 100 அடி உயரம் கொண்ட புகைப்போக்கி திடீரென உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த உடனேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விழுந்த புகைப்போக்கியை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக கோவை ஆனைகட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இப்பகுதியில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட புகைப்போக்கிகள் தற்போது செயல்படாத நிலையில் உள்ளன. இவை சேதமடைவதற்குள் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மேலும் இரண்டு நாட்கள் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேலும் புகைப்போக்கிகள் சரியும் அபாயம் இருப்பதால், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...