பொள்ளாச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே 10 நெம்பர் முத்தூரில் சமுதாய நல்லிணக்கம், பெண்கள் உடல்நலம் மற்றும் பாரம்பரிய கலையை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெண்கள் உடல் நலம் பேணிக்காக்கவும் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் முருகபெருமாள், வள்ளி திருமணம் போன்ற பாரம்பரிய கதைகளை நினைவு கூறும் வகையில் வள்ளி கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் நித்தியானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொள்ளாச்சி பகுதியில் காராள வம்ச கலைச்சங்கம் சார்பில் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் உடல்நலம், மனநலம் பேணி காக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பயிற்சி எடுத்தவர்கள் உடலில் இருந்த குறைபாடுகள் நீங்கியுள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்," என்றார்.

மேலும் அவர், "நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையில் விளங்கும் வள்ளிக்கும்மியை மீட்டெடுத்து ஒரே இடத்தில் பதினாறாயிரம் பேரை அரங்கேற்றம் செய்து உலக சாதனை படைத்தனர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டினருக்கும் இந்த பயிற்சி சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இல்லாமலும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த வள்ளி கும்மியை கற்று வருகின்றனர்," என்று தெரிவித்தார்.

"அரசியல் ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு சமுதாய நல்லிணக்கத்திற்கு ஒரு வழியாக வள்ளி கும்மி மாறிக் கொண்டிருக்கிறது," என்று நித்தியானந்தன் கூறினார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...