உடுமலை திருப்பதி கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு; தஞ்சாவூர் ஆதீனம் சிறப்பு தரிசனம்

உடுமலை ஸ்ரீ வேங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் ஆதீனம் ஸ்ரீசுவாமிநாத தேசிக சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தஞ்சாவூர் ஆதீனம் ஸ்ரீசுவாமிநாத தேசிக சுவாமிகள் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் இக்கோவிலில், இன்று ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகை அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டன. பால், தயிர், பன்னீர், புஷ்பம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ஆதீனம் முனைவர் ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள் கோவிலுக்கு வருகை தந்தபோது, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம், "இன்றைய உலகில் ஆன்மீகம் என்பது இன்றியமையாதது. பெரிய மகான்கள் பிறந்த இந்த தேசத்தில் ஆன்மிகத்துடனே அரசியலும் இருந்து வந்தது. அரசர்களின் அரசவையில் ராஜரிஷிகள் இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தனர். ஆன்மீகம் தழைக்க எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும்" என்று கூறினார்.

இந்நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு லட்டு, துளசி தீர்த்தம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிடபிள் அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...