கோவை சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கோவையில் அதிவேக செப்டிக் டேங்க் லாரி கார் மற்றும் இரு பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.



கோவை: கோவை சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் நேற்று (அக்டோபர் 12) நடந்த கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிவேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி ஒன்று கார் மற்றும் இரு பாதசாரிகள் மீது மோதியதில் இந்த சோகம் நிகழ்ந்தது.

புளியகுளம் பகுதியைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் தனது நண்பருடன் சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த செப்டிக் டேங்க் லாரி ஒன்று முதலில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. பின்னர் அதே லாரி சாலையோரம் நடந்து வந்த மருதாசலம் மற்றும் அவரது நண்பர் மீதும் மோதியது.

இந்த மோதல் காரணமாக கார் மீது தூக்கி வீசப்பட்ட மருதாசலம், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



விபத்தை ஏற்படுத்திய செப்டிக் டேங்க் லாரியின் ஓட்டுநரான பிரவீன் என்ற இளைஞரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...