பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோரிக்கை

கோவை மாவட்டத்தின் நொய்யல் திட்ட ஏரிகளில் ஒன்றான பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின் நொய்யல் திட்ட ஏரிகளில் ஒன்றான பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பேரூர் பெரியகுளத்திற்கு இரண்டு மிகை நீர்ப்போக்கிகள் உள்ளன. பேரூர் சிறுவாணி சாலை அருகில் 86 அடி அளவிலான மிகைநீர்ப்போக்கி அமைந்துள்ளது. இந்த மிகைநீர்ப்போக்கியின் உயர்ந்தபட்ச நீர் மட்டத்தை அடையும் முன்பே, அதன் அருகாமையில் உள்ள பேரூர் பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வழியாக குளத்தின் நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் காரணமாக, குளத்தின் நீர் தேங்கும் பரப்பளவு 1.072 சதுர கிலோமீட்டரிலிருந்து 9 அங்குலம் குறைந்துள்ளதாகவும், இதனால் 24 கோடி லிட்டர் நீர் தேங்கும் திறனை இழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீர் வரத்து உள்ள காலத்திலேயே குளத்தின் கொள்ளளவு முழு மட்டத்திற்கு இருப்பதை உறுதி செய்யும்படியும், மிகைநீர் போக்கியின் அருகாமையிலுள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக குளத்து நீர் வெளியாவதை தடுக்க போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுமாறும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையானது மாவட்ட ஆட்சித்தலைவர், நீர் வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர், மற்றும் நொய்யல் பாசன உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...