கோவை மாநகராட்சி: ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு

கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் ஆக்கிரமிக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது. பட்டகே வீதியில் உள்ள ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு அகற்றப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 56வது வார்டில் உள்ள பட்டகே வீதியில், மாநகராட்சிக்கு சொந்தமான ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சிமென்ட் ஷீட் வீடு மற்றும் பொது கிணறு ஆகியவை அகற்றப்பட்டன. ரூ.1.5 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அக்டோபர் 10 அன்று மீட்டனர்.

56வது வார்டில் உள்ள ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானம் மற்றும் அடப்பக்காடு அருகில் 5.58 சென்ட் பரப்பளவு கொண்ட ரோட்டில் இந்த ஆக்கிரமிப்புகள் இருந்தன. பொது கிணறு உபயோகிக்கும் இடத்தில், 161 சதுர மீட்டர் அளவில் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.

கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தாமாக ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. மாறாக, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரையப்பத்திர நகலை சமர்ப்பித்தனர்.

நகரமைப்பு பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் மாநகராட்சி ரோட்டும் பொருந்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடித்து அகற்றினர்.

மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்க பொறியியல் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொது கிணறு அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...