சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்பு: இரு வடமாநில இளைஞர்கள் கைது

கோவை சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளியில் படிக்கும் இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் கடத்தப்பட்டு மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சூலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பினர். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் மாணவிகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், தோழிகள் மற்றும் உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடினர்.

மாணவிகளைக் காணவில்லை என்பதால் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்குத் தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.

மாணவிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரிக்கும்போது, அவர்களை கடத்திய மனோஜ் குமார் மற்றும் சாய் கியான் ஆகியோர் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. மும்பை போலீசாரின் உதவியோடு காவல்துறையினர் மாணவிகளை மீட்டு சூலூருக்கு அழைத்து வந்தனர்.

விசாரணைக்குப் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (அக்டோபர் 10) கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மாணவிகளின் வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கி இருந்ததாகவும், அவர்கள் கேட்டரிங் மற்றும் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...