சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் கிராமத்தில் காட்டு யானை பாகுபலி நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக நடமாடி வருகிறது. முன்னர் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குரும்பனூர், நெல்லித்துறை, தாசம்பாளையம் போன்ற கிராமங்களில் அதிகம் நடமாடிய இந்த யானை, அண்மைக்காலமாக சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு போன்ற பகுதிகளில் நடமாடி வருகிறது.



இந்நிலையில், இன்று இரவு சுமார் 7:00 மணியளவில் காட்டு யானை பாகுபலி சிறுமுகை-லிங்கபுரம் சாலையில் லிங்கபுரம் கிராமத்தின் அருகே நடந்து வந்தது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டு யானை சாலையில் ஒய்யாரமாக நடந்து வந்த நிலையில், இது குறித்து உடனடியாக உள்ளூர் மக்களுக்கும், சிறுமுகை வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் மற்றும் லிங்காபுரம் ஊர் மக்கள் இணைந்து டார்ச் லைட்டுகளை அடித்து, சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை பாகுபலியை அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதற்கு முன்னதாக, காட்டு யானை பாகுபலி சாலையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டு சாலையின் நடுவே நின்றதால், அந்த வழியாக வந்த வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...