ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. செவ்வந்தி, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



Coimbatore: கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பூஜை செய்வதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர்.

தற்போதைய விலை நிலவரப்படி, செவ்வந்தி பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும், மல்லி பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையும், முல்லை பூ கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், அரளி பூ கிலோ ரூ.400, கோழி கொண்டை பூ கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையும், ரோஜா பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனையாகி வருகிறது.



பூக்களுடன் சேர்த்து வாழை கன்று ஜோடி ரூ.30, கரும்பு ஜோடி ரூ.150, மா இலை ரூ.30, பூசணிக்காய் கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. பொரி, பழ வகைகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

பூ வியாபாரி சங்கத்தின் துணைத் தலைவர் ஹக்கீம் கூறுகையில், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை சற்று குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் பூக்களின் வரத்து குறைந்திருந்தது. அதனால் அதிக விலைக்கு பூக்கள் விற்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால், பொதுவான விலையிலேயே பூக்கள் கிடைக்கின்றன," என்று தெரிவித்தார்.

பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாளை நடைபெறும் ஆயுத பூஜைக்காக அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதுகிறது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...