கோவையில் ரூ.17.50 கோடி ஆன்லைன் மோசடி: இருவர் கைது; சவுரிபாளையத்தில் வாகனத்தில் பணம் திருடியவர் பிடிபட்டார்

கோவையில் ரூ.17.50 கோடி ஆன்லைன் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சவுரிபாளையத்தில் வாகனத்தில் இருந்து ரூ.80,000 திருடிய நபர் கைது செய்யப்பட்டார். இரு சம்பவங்களும் அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடந்தன.


Coimbatore: கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.17.50 கோடி மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சவுரிபாளையத்தில் வாகனத்தில் இருந்து பணம் திருடிய நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்ட மூவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து ரூ.50 லட்சம் ஏமாற்றப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இந்த மோசடி கும்பல் கம்போடியா, மலேசியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயங்கி வருவதும், இந்தியா முழுவதும் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு அளித்து உதவியதோடு, மோசடியிலும் தொடர்புடையதாக திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகர் பகுதியைச் சேர்ந்த கே.வேல்முருகன் (30) மற்றும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் எஸ்.அப்பாஸ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் அக்டோபர் 9 புதன்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் இருவரும் ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் ரூ.17.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், கோவை சவுரிபாளையம் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றவரின் வாகனத்தில் இருந்த 80 ஆயிரம் ரூபாயை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குன்னூரை சேர்ந்த 24 வயதான ரெபய் அகமது என்பவரை அக்டோபர் 10 கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...