கோவை-நாகர்கோவில் இரயில் பாதையில் தற்காலிக மாற்றம்: தெற்கு இரயில்வே அறிவிப்பு

கோவை-நாகர்கோவில் இரயில் அக்டோபர் 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளே இதற்கு காரணம்.


கோவை தெற்கு இரயில்வே நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கோவை பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் பாதையில் தற்காலிக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் ரயில்வே யார்டில் மேற்கொள்ளப்படும் இன்ஜினியரிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் அக்டோபர் 10 முதல் கோவை-நாகர்கோவில் ரயில் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதிய வழித்தடத்தின்படி, கோவை-நாகர்கோவில் ரயில் (எண்: 16321) விருதுநகர், கரூர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக செல்லும். இந்த மாற்றம் அக்டோபர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மட்டுமே அமலில் இருக்கும்.

இந்த வழித்தட மாற்றம் தற்காலிகமானது என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் இந்த தற்காலிக மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள இரயில் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...