பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கோவை: பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் டாக்டர் மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.



மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் மணிவண்ணன் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜதரங்கனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



முன்னதாக மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி கோட்ட காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாலக்காடு சாலை, கோவை சாலை வழியாக சென்று மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பெண்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான மார்பக புற்றுநோய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் சுய பரிசோதனை செய்வதோடு, ஏதாவது அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், டாக்டர் மனீஷ் கேன்சர் மையத்தில் நடைபெறும் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாமை பெண்கள் முற்றிலும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...