ஆனைமலையில் நெல் அறுவடை தொடக்கம்: காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் அறுவடை தொடங்கியது. விவசாயிகள் காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில், ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் நெல் அறுவடைப் பணிகள் இன்று தொடங்கின.



சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன.



ஆழியார் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு மற்றும் போதுமான அளவு பருவமழை பெய்ததால், வயல்களில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது.



அறுவடைப் பணிகளை தொடங்குவதற்கு முன், விவசாயிகள் முதலில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை வயலில் உள்ள காவல் தெய்வத்திற்கு படையலிட்டு, பொங்கல் வைத்து பயபக்தியுடன் வழிபாடு செய்தனர்.



இதைத் தொடர்ந்து, வயல்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு, நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். இந்த நிலையில், விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:

1. ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் கோபத்திற்கு நெல் அறுவடை செய்யும் போது மட்டும் கொள்முதல் நிலையங்களை திறக்காமல், நிரந்தரமாக கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

2. கேரளா மாநிலத்தைப் போல, நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் கொள்முதல் விலையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

3. நெற்கதிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...