பொள்ளாச்சி அருகே முறையற்ற மனநல காப்பகத்திற்கு சீல் - 39 பேர் மீட்பு

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் அனுமதியின்றி இயங்கிய மனநல காப்பகத்தை அதிகாரிகள் மூடினர். 39 நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டனர். மோசமான சுகாதார நிலைமை கண்டறியப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் உள்ள சென்றாம் பாளையத்தில் முறையான அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் மனநல காப்பகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின் போது, 39 நபர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மனநல காப்பக மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாதி உத்தரவின் பேரில், மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், மற்றும் மனநல மருத்துவர் டாக்டர் கிருத்திகா ஆகியோர் இந்த காப்பகத்தை ஆய்வு செய்தனர்.



ஆய்வின் போது, அதிகாரிகள் பல குறைபாடுகளை கண்டறிந்தனர். ஒரே அறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சிலருக்கு காலில் இரும்பு விலங்குகள் மாட்டப்பட்டிருந்தன. கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில், தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தன.

மேலும், இந்த காப்பகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எவ்வித அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த தகவல் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது.

கலெக்டரின் உத்தரவின் பேரில், காப்பகத்தில் இருந்த 30 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உள்பட 39 பேர் அரசு அங்கீகரிக்கப்பட்ட மனநலக் காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இந்த முறைகேடான காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...