மாதப்பூர் விவசாயிகளுக்கு வழித்தடம் கோரி ஆட்சியரிடம் திமுக செயலாளர் மனு

கோவை தெற்கு மாவட்டம் மாதப்பூர் ஊராட்சியில் இரயில்வே பணிகளால் வழித்தடம் இழந்த 18 குடும்பங்களுக்கு உதவக் கோரி, திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.


Coimbatore: கோவை தெற்கு மாவட்டம், சூலூர் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரயில்வே எல்லைப் பணிகள் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் வழித்தடம் பெற்றுத்தர வேண்டும் என்று கோரி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மாதப்பூர், தொட்டிய பாளையம், இராமாச்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் இரயில்வே பாதை எல்லை பணிகளுக்காக இரயில்வே நிர்வாகம் தனியார் மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தடுப்பு வேலிகள் அமைக்க குழிகள் தோண்டியுள்ளது. இதன் காரணமாக 18 குடும்பங்கள் தங்கள் வழித்தடத்தை இழந்துள்ளனர்.

இந்த நிலையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் அவர்களுடைய பாதைகளை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரி, சிங்காநல்லூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தளபதி முருகேசன் இன்று (அக்டோபர் 4) மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர்களிடம் நேரில் சந்தித்து இந்த பிரச்சினையை எடுத்துரைத்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...