கோவை மேயரின் கவுன்சிலர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்த மேயர் ரங்கநாயகியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும்.


கோவை: கோவை மாநகராட்சி கூட்டத்திலிருந்து 47-வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரனை சஸ்பெண்ட் செய்து மேயர் ரங்கநாயகி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 3 அன்று ரத்து செய்தது.

செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு ஸ்டிக்கர் அரசாக இருந்து வருவதாகவும், எந்த ஒரு புதிய திட்டத்தையும் வழங்காமல் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் விமர்சித்தார்.

இதனால் இரு கட்சி கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான விவாதம் மாமன்றத்தில் ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் அடுத்த 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து மேயர் ரங்கநாயகி உத்தரவிட்டிருந்தார்.

தன்னை சஸ்பெண்ட் செய்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி, பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கோவை மேயர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அக்டோபர் 3 அன்று மேயர் பிறப்பித்த உத்தரவை தடை செய்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதன் மூலம் பிரபாகரன் அடுத்த மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது உறுதியாகியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...