கோவையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ஏடிஎம் கொள்ளையன்

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏடிஎம் கொள்ளையன் அசர் அலி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.


கோவை: கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த மாதம் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அசர் அலி, கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சூரில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், கொள்ளையடித்த பணத்தை கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லும் போது, நாமக்கல் மாவட்ட போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. அப்போது நடந்த மோதலில், ஜூமாந்தீன் என்ற கொள்ளையன் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான அசர் அலியின் காலில் போலீசார் சுட்ட குண்டு பாய்ந்தது.

காயமடைந்த அசர் அலி, கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வலது காலில் ரத்த ஓட்டம் நின்று விட்டதால், அறுவை சிகிச்சை மூலம் அந்த கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (அக்டோபர் 3) மாலை 3 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் அசர் அலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்த மேலும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...