பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு சேவை மையம் திடீர் மூடல்: பயணிகள் அவதி

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்களும், ரயில்வே நல சங்க நிர்வாகிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பின்றி ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரமான பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, சென்னை, வட மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.



ரயில் நிலையத்தில் இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென ஒரு முன்பதிவு சேவை மையம் மூடப்பட்டது.



இதனால் முன்பதிவு செய்ய வந்த பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமான வால்பாறை பகுதிக்கும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கானோர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரண்டு முன்பதிவு சேவை மையங்கள் இருந்த போதும், பயணிகள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. மேலும், தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பொதுமக்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திடீரென ஒரு முன்பதிவு சேவை மையத்தை ரயில்வே நிர்வாகம் மூடியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால், மூடப்பட்ட முன்பதிவு சேவை மையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று ரயில்வே நல சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...