கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் கைது

கோவையில் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபர் மருதாசலம் கைது செய்யப்பட்டார். பத்திரிகையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டார்.


Coimbatore: கோவையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு கருத்து பரப்பியதாக யூடியூபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

வெள்ளானைப்பட்டியை சேர்ந்த மருதாசலம் (48) என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், கோவை பிரஸ் கிளப் உறுப்பினர்களாக உள்ள பத்திரிகையாளர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் இருந்து மாதம்தோறும் பணம் பெற்று வருவதாகவும், அதற்கு பிரஸ் கிளப் தலைவராக இருந்த பாபு முக்கிய பங்கு வகித்து வந்ததாகவும் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

பாபு தவிர முன்னணி தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் கேமராமேன்களின் பெயர்களையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து தன் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை மருதாசலம் பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு இணைய வழியில் பாபு புகார் அளித்தார்.

விசாரித்த சைபர் கிரைம் போலீசார் மருதாசலத்தை நேற்று (அக்டோபர் 2) கைது செய்தனர். இந்த சம்பவம் கோவை ஊடக உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...