கோவையில் சுதந்திர போராட்ட வீரர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் 220வது நினைவுநாள் நிகழ்ச்சி: எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

கோவை வேடப்பட்டி வன்னியம்பாளையத்தில் சுதந்திர போராட்ட வீரர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் 220வது நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



Coimbatore: கோவை வேடப்பட்டி வன்னியம்பாளையம் பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் 220வது நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாக்குழுவினர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

1804ல் ஆங்கிலேயரை எதிர்த்து கோவையில் துவங்கி சேலம் வரை ஆயுதப் போராட்டம் நடத்திய புரட்சிப்படை தலைவர் தளபதி இராமசாமி பண்ணாடியாரின் வீரதீர செயல்களை எஸ்.பி.வேலுமணி நினைவுகூர்ந்தார். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பண்ணாடியார், அவர்களின் வரி விதிப்பை எதிர்த்து போராடியதாக குறிப்பிட்டார்.



திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய சிவா, மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோருடன் இணைந்து ஒற்றுமையாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் தளபதி இராமசாமி பண்ணாடியார் என்று வேலுமணி புகழாரம் சூட்டினார்.



மேலும், இந்த பகுதியில் 50 ஆண்டுகளாக பட்டா இல்லாத மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பட்டா வாங்கிக் கொடுத்ததையும் வேலுமணி நினைவுகூர்ந்தார். பண்ணாடியாரின் நினைவு நாளைக் கொண்டாடுவதன் மூலம் இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்றும், அரசு இராமசாமி பண்ணாடியாருக்கு நினைவு நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் வேலுமணி வலியுறுத்தினார்.



இறுதியாக, தளபதி இராமசாமி பண்ணாடியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...