கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு: கிராம சபை கூட்டத்தில் மனு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு வழங்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு தலைமை வகித்தார்.

தமிழக அரசு சமீபத்தில் கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கணக்கம்பாளையம் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு வழங்கப்பட்டது.



இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், கணக்கம்பாளையம் ஊராட்சியை தனி ஊராட்சியாகவே தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த இணைப்பு நடைபெற்றால், கணக்கம்பாளையம் பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இந்த மனு வாசிக்கப்பட்டது. இணைப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக ஊராட்சி நிர்வாகம் உறுதியளித்தது.

கிராம சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், தேவைப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் முடிவு செய்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...