பொள்ளாச்சி அருகே கிராம சபை கூட்டம்: பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி அருகே வடபுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பெண்கள் பாதுகாப்பு, புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடபுதூர் கிராமத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடபுதூர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது, குழந்தை திருமணத்தைத் தடுப்பது, புகையிலை விற்பனையை முற்றிலும் ஒழிப்பது ஆகியவை அடங்கும். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் படிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.



கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக் குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜன், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் செந்தில், திமுக பொறியாளர் அணி நிர்வாகி அசோக் குமார் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...