திருப்பூரில் 'OPERATION ZERO CRIME' திட்டம் தொடக்கம்: குழந்தைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்முயற்சி

திருப்பூரில் குழந்தைகளை இணையவழி குற்றங்கள், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், போதைப்பழக்கத்தை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து "OPERATION ZERO CRIME" திட்டத்தை தொடங்கியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாநகர காவல்துறையும் இணைந்து "OPERATION ZERO CRIME" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். இத்திட்டம் குழந்தைகளை இணையவழி குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதோடு, போதைப்பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையர் லட்சுமி, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



மாநகர காவல் ஆணையர் லட்சுமி கூறுகையில், இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை அடங்கும் என்றார்.

இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் கல்லூரி முதல்வர்கள் கொண்ட ஒரு முக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு ஆலோசனை வழங்க சட்ட ஆலோசகரும், உதவி புரிய தனிப்படை காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் இரண்டு துணைக்குழுக்களின் கீழ் கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது துணைக்குழுவின் கீழ் இரண்டு ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல் துணைக்குழுவின் கீழ் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இரண்டாவது துணைக்குழுவின் கீழ் உள்ள காவல் உதவி ஆணையர்கள் கல்லூரி மாணவர்களுக்கும், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தகுதி வாய்ந்த ஆலோசகர்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள்.

இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளை இணையவழி குற்றங்கள், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல், போதைப்பழக்கத்தைத் தடுத்தல், உயிரியல் மாற்றத்துடன் வளரும் குழந்தைகளைக் காத்தல், போக்குவரத்து விதிமுறைகள் பற்றிக் கற்பித்தல், பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் போன்ற பல்வேறு நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...