மத்திய நிதி அமைச்சரின் கருத்துக்கு எதிராக கோவையில் விஸ்வகர்மா சமூகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விஸ்வகர்மா சமூகம் குறித்த கருத்துக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவைக்கு வந்திருந்தபோது, "விஸ்வகர்மா என்பது ஒரு ஜாதியும் இல்லை பாரம்பரிய தொழிலும் அல்ல" என்று கூறியதற்கு எதிராக, தமிழ்நாடு ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய நிதி அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



அவற்றில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஸ்வகர்மா சமுதாயம் ஒன்று இல்லை என்று கூறியதை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பார்பர் விஸ்வகர்மா என்ற தபால் தலையை திரும்ப பெற வேண்டும், இந்திய அரசாங்கம் விஸ்வகர்மா சமூகத்தை தேசிய சமூகமாக அறிவிக்க வேண்டும் என்பன அடங்கும்.

தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய நிதி அமைச்சரின் கருத்து மிகவும் தவறானது என்றும், அதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் கூறினார். கருத்தை திரும்ப பெறவில்லை என்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும், வருகிற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும், தச்சு, தங்க நகை, பாத்திரம், இரும்பு மற்றும் சிற்பம் ஆகிய ஐந்து தொழில்களை செய்பவர்கள் மட்டுமே விஸ்வகர்மா தொழிலாளர்கள் என்றும், மத்திய அரசின் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 18 தொழில் செய்பவர்களை சேர்ப்பது நியாயமற்றது என்றும் பாண்டியன் கூறினார்.

இறுதியாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...