கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி துவங்கியது. அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் இந்த கண்காட்சியில் மார்பக புற்றுநோய் பற்றிய முக்கிய தகவல்கள் வழங்கப்படுகின்றன.


Coimbatore: கோவை கங்கா மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு மாத விழிப்புணர்வு கண்காட்சி இன்று காலை துவங்கியது. இந்த கண்காட்சியை கங்கா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கனகவல்லி சண்முகநாதன் துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகள், மற்றும் சிகிச்சை முறைகள் பற்றிய விரிவான தகவல்கள் வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ஒருமுறை மார்பகப் பரிசோதனை மற்றும் ஆண்டுதோறும் செய்யப்படும் மேமோகிராம் பரிசோதனை குறித்தும் விளக்கப்படுகிறது.



கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய தவறான கருத்துக்களை நீக்கும் வகையில் மருத்துவ ஆலோசகர்கள் தெளிவான விளக்கங்களை அளிக்கின்றனர். மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்பதையும், மார்பகங்களை சீரமைக்கும் முறைகளையும் பற்றி விளக்குகின்றனர்.

கங்கா மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மெட்ரோபோலிஸ் உடன் இணைந்து "சக்தி" என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை 89 முகாம்களில் 4505 பெண்கள் பரிசோதிக்கப்பட்டு, 58 பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி அக்டோபர் 31 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கங்கா மருத்துவமனையின் கீழ்தளம், பி பிளாக்கில் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியைப் பார்வையிட்டு பயனடையுமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...