கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அக்டோபர் 1 அன்று நடைபெற இருந்த மேயரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (01.10.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மேயர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் வழக்கமாக மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இதில் பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மேயரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம். இந்த மனுக்களின் மீது மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆனால், நிர்வாக காரணங்களால் நாளைய தினம் இந்த கூட்டம் நடைபெறாது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...