கோவை: வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை - மலையோர கிராம மக்கள் அச்சம்

கோவை ஓணப்பாளையத்தில் வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையத்தில் ஒரு வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓணப்பாளையத்தைச் சேர்ந்த ஷயாம் சுந்தர் என்பவரின் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை, அங்கு வளர்க்கப்பட்டு வந்த நாயை கடித்து இழுத்துச் சென்றது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதற்கு முன்னதாக, கோவை தொண்டாமுத்தூர், வண்டிக்காரனூர், விராலியூர், மருதமலை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி சென்றன. இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

சமீபத்தில் வண்டிக்காரனூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.

தற்போது மீண்டும் சிறுத்தை தாக்குதல் நிகழ்ந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறுத்தையை பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...