நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.


பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் (ஜேஎஸ்பி) அமைப்பின் துணைத்தலைவர் ஆதர்ஷ் ஐயர், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு திலக் நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சட்ட நடவடிக்கைகளில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரம் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் நிலையில், இந்த உத்தரவு மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...