பீளமேடு மேம்பால ஏறுதள தூண் அமைப்பை மாற்ற அதிமுக மனு: கோவை ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்படும் மேம்பால ஏறுதள தூணின் இடத்தை மாற்றக் கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பாரம்பரிய சாலையை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலத்தின் ஏறுதளத்தின் தூண் அமைக்கும் பணியை மாற்றி அமைக்க வேண்டி வலியுறுத்தி அதிமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், பாரம்பரியம் மிக்க இந்த சாலைக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை தொடர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் K. அர்சுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R. ஜெயராம் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் நேரில் சென்று மனு அளிக்கப்பட்டது.



பொதுமக்கள் நலன் கருதி இப்பிரச்சினையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலாஜி உத்தம ராமசாமி, முன்னாள் கவுன்சிலர் பீளமேடு துரைசாமி, வசந்தாலயா மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், விளாங்குறிச்சி சாலை மீட்பு குழுவின் விஜயக்குமார், செந்தில்குமார், நந்த கோபால், ராமமூர்த்தி பிரகாஷ், பாரதிதாசன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...