வங்கதேச குடியேற்றவாசிகளை கைது செய்து நாடு கடத்த கோரி மனு

கோவை மற்றும் திருப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்கதேச நாட்டவரை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் முதலமைச்சர் மற்றும் உள்துறை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.


Coimbatore: வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் குடியேறியுள்ள நபர்களை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என்று கோரி இன்று (27.09.2023) ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் தமிழக உள்துறை செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளை தேடி வங்கதேசத்திலிருந்து பலர் சட்டவிரோதமாக எந்த ஆவணங்களும் இன்றி குடியேறி வருவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தமிழகத்திற்கு வந்து தங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக பலர் தமிழகத்திற்கு வர முயற்சிப்பதாகவும், இது எதிர்காலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, கோவை மற்றும் திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேச நாட்டவரை உடனடியாக கைது செய்து, அவர்களின் குற்றப் பின்னணியை விசாரித்து, நடவடிக்கை எடுத்து நாடு கடத்த வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அளித்தார். இந்நிகழ்வில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் மாநிலத் தலைவர் எம். வினோத்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...